தாயாரின் விபரீத முடிவால் 5 வயது மகன் பலி.! 8 வயது மகள் கவலைக்கிடம்…!


தாயொருவர் தனது மகனையும் மகளையும் விஷம் அருந்த வைத்ததுடன் தானும் அருந்திய நிலையில், பாதிக்கப்பட்ட மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மகன் உயிரிழந்துள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொலுவாகொட, தலஹேன பிரதேசத்தை சேர்ந்த ஏ.ஏ. பேஷன் சசிந்தா என்ற ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தாயார் தற்போது கவலைக்கிடமான நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 வயதுடைய மகளும் ஆபத்தான நிலையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் அதிக கடன்பட்டுள்ளதாகவும் விஷம் அருந்திய பெண்ணின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் நால்ல பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post