சுற்றுலா தம்பதியின் காரை கவிழ்த்த காட்டுயானை…!


இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த இத்தாலிய தம்பதியினரை ஏற்றிச் சென்ற காரை காட்டு யானை ஒன்று தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரந்தெனிகல பினிகல பகுதியில் வைத்து அவர்கள் பயணித்த காரை காட்டுயானை இவ்வாறு தாக்கி கவிழ்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டு யானை தாக்கியதில் கார் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் அதில் பயணித்த இத்தாலிய தம்பதியினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடுநிலை மற்றும்  நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...

Post a Comment

Previous Post Next Post