கனடாவிடமிருந்து நிதியுதவி..!



நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா 3 மில்லியன் டாலர் உதவியை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் IFRC அமைப்பு இணைந்து விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதன் கீழ், இந்த நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உணவு, சுகாதாரம், போஷாக்கு சேவைகள், குடிநீர் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க முடியும்.

Post a Comment

Previous Post Next Post