உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் – வங்கி மற்றும் நிதித் துறை 100% பாதுகாப்பு...!



வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பை இல்லாதொழித்தால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தனார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்..

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையின் அங்கீகாரத்துடன், இலங்கையின் நிதித்துறையை பெரிதும் பலப்படுத்தும் வைப்புத்தொகை காப்புறுதிக்காக உலக வங்கியில் இருந்து 150 மில்லியன் டொலர்கள் கிடைப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அதன் மூலம் இந்த நாட்டின் வங்கி மற்றும் நிதித்துறை 100% பாதுகாப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

VAT உட்பட பல்வேறு வரிகள் விருப்பத்துடன் விதிக்கப்பட்டதல்ல, ஆனால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அந்த கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த நடவடிக்கைகளினால் பொருளாதாரம் வலுவடையும் போது மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

Previous Post Next Post