Trending

நீங்களும் லெட்சாதிபதியாகலாம்! மக்களே உஷார்! அடுத்தது என்ன?


இரண்டு வகை நிதிக்குற்றங்கள்:
 
தற்போது வரை, மக்களின் வங்கிக்கணக்கில் இருந்து இரண்டு வகையில் மோசடி செய்து பணத்தை திருடுகின்றனர்.
 
1. மக்களிடம் அதிக வருமானம் கிடைக்கும் எனக்கூறி அவர்களின் அனுமதியுடனேயே அவர்களின் ஓடிபி மற்றும் கடவுச்சொல்லைப் பெற்று அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது போன்ற குற்றச்செயல்கள் நடக்கிறது. இது ஒரு வகை

2019 ஆண்டில் மட்டும், மக்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை தெரியாதவர்களிடம் கொடுத்து இழந்த பணம் சுமார் ரூ 50 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் செயலிகள் தரும் தனிநபர் கடன் மற்றும் UPI மூலம் இவ்வகை மோசடிகள் நடக்கிறது. நமது தனிப்பட்ட தகவல்களை பிறரிடம் கொடுக்காமல் இருப்பதன் மூலம் இதுபோன்ற மோசடிகளை தவிர்க்கலாம்.

2. இதில் மக்கள் தங்களின் வங்கிக்கணக்கின் விபரம் மற்றும் இதர தகவல்களை யாரிடமும் பகிராமலேயே, வங்கிக்க கணக்கை ஹேக்கிங் செய்து அல்லது கடவுச்சொல்லை திருடி, மக்களின் பணத்தை மோசடி செய்வது இரண்டாவது வகை. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க அரசும், வங்கிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனால், செய்றகை நுண்ணறிவால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் டீப் ஃபேக்கால்(Deep Fake) ஏற்படக்கூடிய பிரச்சனைகள், இந்த இரண்டு வகையில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டவை. ஏனென்றால் டீப்ஃபேக் மூலம் ஒரு நபரைப் போன்று டிஜிட்டலாக போலி நபரை உருவாக்க முடியும்.

அதிக வருமானத்தை நம்பாதீர்கள்:

01-அதிக வருமானம் தரும் எந்தவொரு திட்டமும் முழுமையாக ஆராயப்பட வேண்டும்.

யாருடைய வார்த்தைகளையும் கருத்துக்களையும் நம்பாதீர்கள். உங்கள் நேரத்தை ஒதுக்கி நீங்களே படிக்கவும். கடந்த காலங்களில் இதுபோன்ற திட்டங்கள் ஏதேனும் வந்துள்ளதா என்று பாருங்கள்.

சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், அவற்றில் முதலீடு செய்ய வேண்டாம்.

ஏனென்றால் நமக்கு சேரும் வட்டியை விட நம்மிடம் இருக்கும் பணத்தை பாதுகாப்பதே முக்கியம். இது தனிப்பட்ட நிதிக் கொள்கைகளில் ஒன்றாகும்.

2. OTP, PIN போன்ற தகவல்களை யாரிடமும் பகிராதீர்கள்:

எந்த சூழ்நிலையிலும் OTP மற்றும் PIN போன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம். உங்கள் OTP போன்ற தகவல்களைப் பெற எந்த நிறுவனத்திற்கும் உரிமையோ அல்லது தேவையோ இல்லை.

3. மன அழுத்ததிட்கு ஆளாக வேண்டிய நிலை:

நீங்கள் முதலீடு செய்த பாலிசிகள் அல்லது நிறுவனங்களைப் பற்றி எதிர்மறையான செய்திகள் வந்தால், உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சில நாட்கள் காத்திருக்கவும். அதிகாரப்பூர்வ ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டுமே நம்புங்கள்.

செயற்கை நுண்ணறிவு முக்கிய ஊடகங்களில் கூட ஊடுருவும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. நீண்ட காலத் திட்டம்:

நீண்ட காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது தனிப்பட்ட நிதி மேலாண்மையின் அடிப்படையாகும். இப்படி முதலீடு செய்வதன் மூலம் நிறுவனங்கள் டீப் ஃபேக் தாக்குதல்களில் இருந்து மீண்டு வரும்.

சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் விரைவாக முந்தைய நிலைக்குத் திரும்புகின்றன. வாரன் பஃபெட் பல தசாப்தங்களாக கோகோ கோலா நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பங்குகளை வைத்திருந்தார். நீண்ட காலத்திட்டத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

(குறிப்பு: இந்தக் கட்டுரை குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய பொதுவான புரிதலுக்காக மட்டுமே. உங்கள் தனிப்பட்ட நிதி ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)

Post a Comment