இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபகரமாக மரணம்!

 நீர்கொழும்பு (Negombo) வெல்ல வீதி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு மாணவர்கள் நேற்று (14) அந்த இடத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்  பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, நீரில் மூழ்கிய இரு மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீரில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழப்பு | Medical Student Drown Death Karaitivu

மேலும்,14 மற்றும் 17 வயதுடைய இரண்டு மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post