இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 1,960 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஜனவரி 1 முதல் செப்டம்பர் 17 வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் காலகட்டத்தில், 1,843 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன.
இதுதவிர, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,708 பாரதூரமான விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.