பங்களாதேசில் (Bangladesh) கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது வெடித்த வன்முறையில் 1,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்று இடைக்கால சுகாதார அமைச்சின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது 1971 சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் வரலாற்றில் இரத்தக்களரி காலகட்டமாக அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பொதுத்துறை வேலை ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
பின்னர் அது பிரதமர் சேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) எதிரான கிளர்ச்சியாக தீவிரமடைந்தது. இதனையடுத்து அவர் ஆகஸ்ட் 5 அன்று பதவி விலகி இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
இந்தநிலையில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ் (Muhammad Yunus) தலைமையிலான ஒரு இடைக்கால அரசாங்கம் ஹசீனாவுக்கு பின்னர் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றது.
