டெல்லி குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து | தொடர்ந்து உயரும் பிஞ்சுகளின் உயிரிழப்பு!


கிழக்கு டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை பராமரிப்பு மைய மருத்துவமனையில், நேற்று இரவு 11.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்திலேயே அந்த தீ மருத்துவமனை முழுவதும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு 16 தீயணைப்பு  வாகனங்கள் விரைந்துவந்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் மருத்துவமனையில் முதல் தளத்திலிருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 7 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 7 குழந்தைகளுமே, பிறந்த சில தினங்களேயான பிஞ்சுகள் எனக் கூறப்படுகிறது. இது நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.




Post a Comment

Previous Post Next Post