தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (15) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - மாஞ்சோலை வீட்டுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
கணவன் மனைவி இருவருக்குமிடையில் ஏற்பட்ட குடும்ப தகறாறே இவ் மரணம் ஏற்பட காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
